வெடிக்காத குண்டுகளிலிருந்து வெடித்த தகவல்கள்
இரண்டாம் உலக யுத்த கால குண்டு ஒன்று ேஜர்மனிய நகரான லூட்விக்ஸ்பானில் கடந்த வாரம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த குண்டைச் செயலிழக்கச் செய்வதற்காக அவ்வூரிலுள்ள மக்கள் 18,500 பேரை அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.
கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலரினால் இக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அப்பிரதேசத்தில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது நேச நாடுகளின் வான் வழித் தாக்குதல்களின் போது வீசப்பட்ட மேலும் வெடிக்காத குண்டுகள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் வீசப்பட்டதாக கணிக்கப்பட்டுள்ள இக்குண்டு 1,100 இறாத்தல் நிறையுடையதாகக் காணப்பட்டது. குண்டு செயலிழக்கச் செய்யப்படும் பொழுது குண்டு கண்டு பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து ஆயிரம் மீற்றர் சுற்றளவுக்குள் (0.6 மைல்) உள்ளோர் காலை எட்டு மணிக்குள்(0600 GMT) வெளியேற வேண்டுமென நகர அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். குண்டு செயலிழக்கச் செய்யப்படுவதற்கு ஆறு மணித்தியாலங்கள் செலவிட வேண்டியதாயிற்று.
கட்டுமானப் பணிகளின் போது இவ்வாறு வெடிக்காத குண்டுகள் கண்டு பிடிக்கப்படுவது ஜேர்மனில் அவ்வப்போது நடைபெறும் ஒரு விடயமே. இரண்டாம் உலக யுத்தத்தின் போது நேச நாடுகள் எவ்வளவு மோசமாக நாஸிகள் மீது குண்டு மாரி பொழிந்தார்கள் என்பதன் வரலாற்றை இப்படி அடிக்கடி கண்டுபிடிக்கப்படும் குண்டுகள் பறைசாற்றுகின்றன.
கடந்த ஆண்டு செப்ெடம்பரில் ஃபிரேங்.ேபார்ட் நகரில் ஒரு பெரிய குண்டு கண்டு பிடிக்கப்பட்ட போது 70,000 மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். 1.8 டொன் நிறையுடைய பூதாகரமான அந்த பிரித்தானிய குண்டு "புளொக்பஸ்டர்' (BLOCKBUSTER) எனப் பெயரிடப்பட்டது. அதே போன்று ஏப்ரலிலும் பேர்லின் புகையிரத நிலையத்தருகே ஒரு பிரித்தானிய குண்டு கண்டு பிடிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
பிற்பகல் இரண்டு மணியளவில் 'நல்ல செய்தி. குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டது. மக்கள் வீடுகளுக்குத் திரும்பி வரலாம்' என்ற செய்தியை லூட்விக்ஸ்பான் நகர சபை தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டரில் வெளியிட்டது. அத்துடன் அகழ்ந்தெடுக்கப்பட்டவுடனேயே ஒரு பலகை வண்டியில் வைத்து கட்டப்பட்டிருந்த துருப்பிடித்த குண்டின் படத்தையும் வெளியிட்டிருந்தது.
இந்த குண்டு அமெரிக்கப்படைகளினால் வீசப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. ஒரு இலட்சத்து 65 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட லூட்விக்ஸ்பான் நகரம் தென்மேற்கு ஜேர்மனியில் ஃபிரேங்ேபார்ட் நகரத்திற்கு 50 மைல் தொலைவில் உள்ளது.
இரண்டாவது உலக யுத்தம் நடந்து எழுபது ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னமும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2000 டொன் வெடிக்காத குண்டுகள் ஜேர்மனிய மண்ணிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றால் சற்று வியப்படையாமல் இருக்கமுடியவில்லை.
ஒரு வீட்டை விரிவுபடுத்துவது முதல், தேசிய புகையிரத அதிகாரசபையினால் ஒரு புகையிரத பாதை அமைப்பது வரை எதுவானாலும் அந்த மண்ணிலிருந்து வெடிக்காத வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதென சான்று படுத்தப்பட வேண்டும். இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னரான காலப்பகுதி பூராகவும் ஜேர்மனியில் அமைதி நிலவி வருகின்ற போதும் ஜேர்மனிய குண்டு அகற்றும் படைகள் தான் உலகிலேயே மிகச் சுறுசுறுப்பாக இயங்கி வருபவையாகும். 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 11 தொழிநுட்பவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இதில் மூவர் 2010 ஆம் ஆண்டு கொட்டின்ஜென் நகர் சந்தைப் பகுதியில் ஆயிரம் இறாத்தல் நிறையுடைய ஒரே குண்டினை செயலிழக்கச் செய்யும் போது கொல்லப்பட்டார்கள்.
1986 ஆம் ஆண்டு முதல் குண்டு செயலிழப்புத் துறையில் பணியாற்றி வரும் ஹோர்ஸ்ட் ரெய்ன்ஹார்ட் இது பற்றி சமீபத்தில் குறிப்பிட்ட போது '86 ஆம் ஆண்டு நான் இப்பணியை ஆரம்பித்த போது 30 ஆண்டுகள் கழிந்தும் நான் இப்பணியிலேயே தொடர்ந்து இருப்பேன் என நினைக்கவேயில்லை. மண்ணுக்கு அடியிலே இன்னமும் நிறைய குண்டுகள் மறைந்து கிடக்கின்றன என்பதை மக்கள் சாதாரணமாக அறியாதிருக்கின்றார்கள்" எனத் தெரிவித்துள்ளார். அவர் சாதாரணமாக ஆண்டொன்றுக்கு சுமார் 500 டொன் வெடிக்காத குண்டுகளை அகழ்ந்தெடுப்பதுடன் இரண்டு வாரத்திற்கொரு முறை வெடிக்காத வான்வழிக் குண்டு ஒன்றினை செயலிழக்கச் செய்கின்றார்.
இரண்டாவது உலக யுத்தத்தின் போது 1940 -– 1945 காலப்பகுதியில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்படைகள் 2.7 மில்லியன் தொன் குண்டுகளை ஐரோப்பாவின் மேல் வீசின. இதில் அரைவாசிக்கும் அதிகமானவை ஜேர்மனியின் மேல் வீசப்பட்டன. அச்சு நாடுகள் என எடுத்துக் கொண்டால், நேச நாடுகளின் படைகள் 3.4 மில்லியன் தொன் குண்டுகளை அச்சு நாடுகள் மேல் வீசின. இந்த குண்டுகளினால் 3 இலட்சத்து 5 ஆயிரம் முதல் 6 இலட்சம் பேர் வரையிலான ஜேர்மானியர்களும், 3 இலட்சத்து 30 ஆயிரம் முதல் 5 இலட்சம் வரையிலான ஜப்பானியர்களும் கொல்லப்பட்டனர். அதே நேரம் அச்சு நாடுகளின் குண்டு வீச்சுக்களினால் 60 ஆயிரத்து 595 பிரித்தானியர்களும், 67 ஆயிரத்து 78 பிரான்ஸியரும் 5 இலட்சத்துக்கு அதிகமான சோவியத் மக்களும் கொல்லப்பட்டனர்.
ஆனால் வியட்நாம் யுத்தத்தின் போது வீசப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை நம்மை அசர வைக்கும். வியட்நாம் யுத்தம் முடிவுறும் வரை வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்கா வீசிய குண்டுகளின் நிறை ஏழு மில்லியன் தொன்களாகும். இது இரண்டாவது உலக யுத்தத்தின் போது மொத்தமாக வீசிய குண்டுகளைப் போல இரண்டு மடங்காகும்.
1940 செப்ெடம்பர் ஏழாம் திகதி லஃப்ட்வேஃப் என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஜேர்மனிய வான்படை லண்டன் மீதும் ஏனைய முக்கிய பிரித்தானிய நகரங்கள் மீதும் ஈவிரக்கமற்ற குண்டுத் தாக்குதலை நடத்தியது. இதுவே இரண்டாம் உலக யுத்தத்தின் போது நடத்தப்பட்ட முதல் குண்டு தாக்குதல் ஆகும்.
இரண்டாவது உலக யுத்தத்தின் போது குண்டு வீச்சுத்தாக்குதல்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவை பின்வரும் நகரங்களாகும். அலெப்பொ (சிரியா) பேர்லின் (ஜேர்மனி) வார்ஸோ (போலந்து) ஹீரோஷிமா நாகசாகி (ஜப்பான்) காபுல் (ஆப்கானிஸ்தான்) ஸரஜயெவோ (பொஸ்னியா) டிரேஸ்டன் (ஜேர்மனி) மற்றும் பெய்ரூட் (லெபனான்)
இதில் அலெப்பொ (சிரியா) காபுல் (ஆப்கானிஸ்தான்) ஆகிய நகரங்கள் இன்றளவும் பிச்சினைக்குரிய நகரங்களாகவே இருப்பது அந்நகரங்களின் தலைவிதியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஆயுதக் கலாசாரமும் சர்வாதிகாரிகளின் போக்குகளும் மனித குலத்தை எங்கே கொண்டு செல்கின்றன என்ற மௌனச் செய்தியைத்தான் இந்த வெடிக்காத குண்டுகள் விடுப்பதாக எண்ணத் தோன்றுகின்றது.